Wednesday, January 16, 2008

02.09.2007: நன்றாகத்தான்...

நன்றாகத்தான்...

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
அவளைச் சந்தித்ததில் இருந்து

பேசிப் பழகி பிடித்துப் போய்
நட்போடு காதலையும் வளர்த்து

அக்காதலை இருவரும்
பகிர்ந்து கொண்டு என்றும்,

நாங்கள் தான் உலகம்
என்று யாவற்றையும் மறந்து

கை கோர்த்துக் கொண்டு
ஊர்கோலம் போய்க் கொண்டு என்றும்,

எங்கள் பயணம் நன்றாகத்தான்
போய்க் கொண்டு இருந்தது...

நேரமாச்சு எழுந்திருடா என்று
அம்மா என்னை எழுப்பும் வரை!!!

1 comment:

த.ராஜசேகர் said...

அக்காதலை இருவரும்
பகிர்ந்து கொண்டு என்றும்,

நாங்கள் தான் உலகம்
என்று யாவற்றையும் மறந்து

கை கோர்த்துக் கொண்டு
ஊர்கோலம் போய்க் கொண்டு என்றும்,


இந்த மூண்று வரிகளிலும்.. - "என்றும்" என்பது.. பொருந்தாமல்... இருப்பது போல்.. தோன்றுகிறது..

மற்றபடி, சொல்ல வந்த கருத்து... நன்றாக இருந்தது..