Monday, July 21, 2008

21.07.2008 : எதைப் பற்றி???

எதைப் பற்றி???

நாமும் ஒரு
கவிதை எழுதலாம்
என்று யோசித்தபொழுது...

கடவுளர்கள்
பக்தியைப் பற்றி
எழுதத் தூண்டினார்கள்...

என்னவள்
காதலைப் பற்றி
எழுதத் தூண்டினாள்...

உறவுகள்
அன்பைப் பற்றி
எழுதத் தூண்டினார்கள்...

நண்பர்கள்
நட்பைப் பற்றி
எழுதத் தூண்டினார்கள்...

இப்படி பல்வேறு
தூண்டுதல்கள்
எதைப் பற்றி எழுதுவது
என்று குழப்பம்
ஏற்படுத்தியதால்...

இன்றும் யோசித்துக் கொண்டே
இருக்கிறேன்...
எதைப் பற்றி எழுதுவது என்று!!!

No comments: