Wednesday, March 4, 2009

02.Oct.08: யோசனை...

யோசனை...

பிறந்த நாளுக்காகவோ...
வீட்டில் நல்ல விஷயத்துக்காகவோ...
அலுவலகத்தில் பதவி உயர்வுக்காகவோ...
கல்யாணம் முடிவு ஆனதற்காகவோ...

இப்படி
ஏதோ ஒரு காரணத்துக்காக
நண்பர்களோடு ஓர் உணவகத்தில்
நன்றாக கதைத்து உண்டபின்...

சில ஆயிரத்தை தாங்கி வந்த
bill-க்கு debit அல்லது credit card-இல்
தேய்த்து விட்டு கையெழுத்திட - ஒரு கணம்
கூட யோசிக்காத என் மனம்

சாலையோரத்திலோ, கோவில் வாசலிலோ
பிச்சை கேட்போருக்கு ஒரு ரூபாய்
போடுவதற்கு ஏனோ அவ்வளவு யோசிக்கிறது!!!

1 comment:

த.ராஜசேகர் said...

அதற்கு காரணம் - "சுய"நலம்