நன்றி
புகைப்படத்தோடு ஜாதகத்தை இணைத்து அனுப்பியதும்
அனைத்தும் நன்றாக பொருந்தியுள்ளது என்றும்
ஒரு தேதியில் வருகிறோம் என்றறிவித்து
அந்த தினத்தன்று ஒரு குழுவோடு
பாட்டன் காலத்து விஷயத்தில் ஆரம்பித்து
எங்களின் தற்கால விஷயங்கள் வரை
அலசிவிட்டு, எங்களின் விருந்தோம்பலில் வயிறாறி
அப்புறமாய் சொல்லுகிறோம் என்று கூறி
யுகம் கழிந்தும் சேதியேதும் வராததால்
உண்டான மன உளைச்சலுக்கு வித்திட்ட
நக்கீரன் குடும்பத்தில் நீயும் ஒருவன்தான்
என்றாலும் - இனி அந்த மன உளைச்சலுக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்ட உனக்கு நன்றிகள் கோடி!!!!
Saturday, March 14, 2009
15.Mar.2009: நன்றி
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Dont understand the context though...
"Nakeeran kudumbam??" ennaku puriyala...
Post a Comment