Monday, March 16, 2009

17.Mar.2009: பத்திலிருந்து ஒன்று வரை...

பத்திலிருந்து ஒன்று வரை...

பத்தாவது படித்த நாளில் 
இருந்தே ஏதும் விளங்கவில்லை...
ஒன்பது வருடங்களுக்கு பிறகு
உன்னைப் பார்த்தும் விளங்கிவில்லை...
எட்டுத் திக்கிலிருந்தும் உன்
நினைவு என்னை சூழ்ந்ததால்
ஏழு பரிட்சையில் தேறாமல்
அரியர்ஸ் எல்லாம் வாங்கியபோதும்...
ஆறு செமஸ்டருக்குள் அனைத்தையும்
முடிக்க முடியாமல் போனபோதும்...
ஐந்தாண்டு திட்டம் போட்டு
அவற்றை எப்படியோ முடித்தபோதும்...
நான்கு இலக்க சம்பளத்திலோர்
வேலையில் சேர்ந்த பிறகும்...
மூன்று நிலை முன்னேறிய
பொழுதிலும் உன்னைப் புரியவில்லையடி.
இரண்டாம் தேதியன்று திருமணம்
என்ற அந்த கணத்தில்தான்
ஒன்றல்லாது அனைத்துமே விளங்கியது
நானொரு முட்டாள் என்பதுட்பட!!